Main Menu

உடல்பாகத்தில் செயற்கை மூக்கு உருவாக்கி மருத்துவத் துறையினர் சாதனை

உடல்பாகத்தில் இருந்து செயற்கையாக மூக்கு ஒன்றை உருவாக்கி, அதை இளைஞன் ஒருவருக்கு பொருத்தி பிரெஞ்சு மருத்துவத்துறையினர் சாதனை படைத்துள்ளனர்.

உலகத்தில் முதல்தடவையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இளைஞன் ஒருவருக்கு புற்று நோய் காரணமாக அவரது மூக்கு அகற்றப்பட்டது. Toulouse நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் இச்சிகிச்சை இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் மூக்கு இல்லாமல் வாழ்ந்த குறித்த இளைஞனுக்கு, இவ்வாரத்தில் மூண்டும் மூக்கு கிடைத்துள்ளது.

குறித்த இளைஞனின் உடல் தசைகளையும், சில செயற்கை biomatériau பொருட்களையும் கொண்டு அவரது மூக்கு உருவாக்கப்பட்டது. இளைஞனின் கைகளில் ‘முப்பரிமான அச்சு’ (3D Print) மூலம் இந்த மூக்கு உருவாக்கப்பட்டு இரத்த ஓட்டம் கொண்ட உறுப்பாக வளர்க்கப்பட்டது.

பின்னர் குறித்த மூக்கு கைகளில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மூக்கில் பொருத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவம் இடம்பெறுவது உலகில் முதன் முறையாகும்.

Toulouse புற்றுநோயிற்கான பல்கலைக்கழக மருத்துவமனை இந்த சாதனையை படைத்துள்ளது.

நோயாளி நலமுடம் இருப்பதாகவும், அவரது உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...