Main Menu

உக்ரைன் கெர்சன் நகரில் ரஷியா தாக்குதல்- 15 பேர் பலி

உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் கெர்சன் நகரை கைப்பற்றி இருந்தது. இதற்கிடையே சமீபத்தில் உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதையடுத்து கெர்சன் நகரை உக்ரைன் ராணுவம் மீட்டது. இந்த நிலையில் கெர்சனில் ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகிறார்கள். சுமார் 60 லட்சம் குடும்பங் கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்

பகிரவும்...