Main Menu

ஈழத்தமிழர்களுக்காக திருச்சியில் போராட்டம் : நூற்றுக் கணக்கானோர் கைது!

ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுகளாக விசாரணைகள் இல்லாமல்  தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளதுடன், அண்மையில் 20 பேர் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றனர்.

இந்நிலையில் இந்த முகாம்களை உடனடியாக மூடிவிட்டு அப்பாவி ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சிறப்பு முகாம்களை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...