Main Menu

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்!

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே அஜித் டோவால், இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் இந்த  பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு மாலைத்தீவை சேர்ந்த பிரதிநிதிகளும் வருகை தருவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஆலோசகர் அஜித் டோவால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு பிரதிநிதிகளுடன் நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இத்தகைய கலந்துரையாடலொன்று கடந்த 2014ஆம் ஆண்டு, புதுடெல்லியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...