Main Menu

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபாண்டே தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...