Main Menu

இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்!

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளும் அவர், இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தில், இலங்கை சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையம் பாதுகாப்புத் துறைசார் முக்கியஸ்தர்களையும் வெய் ஃபெங் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

பகிரவும்...