Main Menu

இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால

எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  பொலன்னவையில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன சிறந்த வெற்றியைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும்  அவர் அமைச்சரவை அமைச்சராக அமர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...