Main Menu

இறுதி தருணத்தில் திருமதி அழகி கிரீடத்தை நழுவ விட்ட பெண் வைத்திய சாலையில் அனுமதி

இலங்கையில் நடத்தப்பட்ட திருமதி அழகி 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே  புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து கிரீடம் அகற்றப்பட்டு, இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டு, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறு கிரீடத்தை அகற்றிய வேளையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி இன்று (திங்கட்கிழமை) காலை, புஷ்பிகா டி சில்வா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது புஷ்பிகாவின் உச்சந் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்குப் பின்னர், அவர் மன ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் உதவியாளர் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பிகா தனது கணவரிடமிருந்து விவாகரத்து செய்யவில்லை என்றும், ஜூரி, அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த போட்டியில் தனக்கு தீங்கு விளைவிக்கப்பட்டுள்ளதாக புஷ்பிகா டி சில்வா முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பகிரவும்...