Main Menu

இரண்டாம் தவணை 29ம் திகதி ஆரம்பம்

நாளை ஆரம்பமாக இருந்த சகல அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற தொடர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, 2ம் தவணைக்காக கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாக இருந்த பாடசாலைகளுக்கு இன்று வரையில் விடுமுறை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போதை நிலையில் பாடாசலைகளில் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினால், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.

பகிரவும்...