Main Menu

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனியில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேநேரம் பனிசரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கும் நடுவில் உள்ள லம்காகா கணவாயில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...