Main Menu

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (29) மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் சமகால நிலவரங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு, மலையக மறுமலர்ச்சிக்காக இந்தியா வழங்கி வரும் அபிவிருத்திசார் பங்களிப்புகளுக்கும் மலையக மாணவர்களுக்கு இந்தியா வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கும் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதில் மலையக மக்களுக்குரிய வகிபாகம் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக, பாரத் -லங்கா வீட்டுத் திட்டம்  குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பகிரவும்...