Main Menu

இந்தியா இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது- மத்திய அரசு

இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடியே 11 இலட்சத்து 43 ஆயிரத்து 649 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் அசாம்,  பீகார்,  டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களில் தலா 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் இதுவரை 48 இலட்சம் பேருக்கு முதல் டோஸ் மருந்து  செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேருக்கு 2ம் டோஸ் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...