Main Menu

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தான் இராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

பாக்கிஸ்தான்  உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்,  அவர்களுக்கு ஆப்கான் தலிபான்களுடன்  நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் குறித்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததுடன்,  அவர்களின் செயல்பாடுகளையும் பாக்கிஸ்தான் இராணுவம் கண்காணித்து வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை அவர்களின் தொலைப்பேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டத்தில், பனி உருகத் தொடங்கும்போது அவர்கள் இந்தியாவில் ஊடுருவலாம் என உளவுத்துறையினர்  எச்சரித்துள்ளனர்.

பகிரவும்...