Main Menu

இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் கடும் சேதம்

புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தும், பாலங்கள் உடைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன.

பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இரு நாடுகளிலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

பகிரவும்...