Main Menu

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல் !

காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத நேரத்தில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது.

பகிரவும்...