Main Menu

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக டென்மார்க் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி குறித்து அந்தந்த நாடுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...