Main Menu

அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!

அவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விபத்தினை ஏற்படுத்திய வான் ஒன்றிலிருந்தே இவ்வாறு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 273 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 140 அமெரிக்க டொலர்கள் எனவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இதன்போது 28 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...