Main Menu

அவசரகால பிரகடனத்தை மீளப் பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமது கூட்டணியின் நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...