Main Menu

அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலில் இராணுவத்தின் ஆதிக்கம் – சுமந்திரன் எச்சரிக்கை

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அந்த இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட் நாடுகளின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடிய போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் செலவினங்களைக் குறைக்குமாறு பரிந்துரைகளை குறித்த நாடுகள் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக மக்களுக்கான செலவினங்களைக் குறைப்பதைவிடுத்து பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்குமாறு பரிந்துரைக்கும்படி சர்வதேச நாணய நிதியத்திடம் தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

பகிரவும்...