Main Menu

அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு

அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு சென்டிமீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

மேலும் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாமல் தேர்தல் வெற்றியை மாத்திரம் கவனத்தில் கொண்டுச் செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பின்போது மக்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...