Main Menu

அரசாங்கம் அவசர தீர்வொன்றை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள்

தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன உட்பட பலர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கம் மிகக்கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கூட்டு திட்டமொன்றிற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கைக்கு மிகவும் சிறந்த பொருளாதார கொள்கை அவசியம் என்றும் இது தற்போதைய நிலைமைக்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் இறையாண்மை கடனை செலுத்துவதை ஒத்திவைப்பதற்கும் கடனை செலுத்துவது குறித்த மீள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பலபடிமுறையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

பகிரவும்...