Main Menu

அமெரிக்க பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஒரு ஆசிரியர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

16 வயது சிறுவனும் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன், தந்தையின் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர 15 வயதுடைய சிறுவன் என்றும் அவன் சம்பவம் இடம்பெற்று 5 நிமிடங்களில் சரணடைந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...