Main Menu

அனைத்து சவால்­க­ளையும் முறியடித்து தேர்­தலில் வெற்றிபெறுவேன் – கோத்தாபய

ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யக ரீதியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யா­த­வர்கள் இன்று  பாரிய அர­சியல் சூழ்ச்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளார்கள். அனைத்து சவால்­க­ளையும் வெற்­றி­கொண்டு நிச்­சயம் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றிப்பெறுவேன் என பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா மாஜன கட்­சியின் தேசிய மாநாடு நேற்று குரு­நாகல்  நகரில்   இடம் பெற்­றது . இந்­நி­கழ்வில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து இடம் பெற்ற தொழிற்­சங்­கத்­தி­னதும், சிவில் அமைப்­புக்­க­ளி­னதும் தேசிய மாநா­டு­களில் கைய­ளிக்­கப்­பட்ட பரிந்­து­ரைகள் அனைத்தும் எமது ஆட்­சியில் நிறை­வேற்­றப்­படும்.

தேசிய பாது­காப்பு , தேசிய பொரு­ளா­தாரம் இரண்டும் ஒரு நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். ஆனால் எமது நாட்டில் இவ்­வி­ரண்டு விட­யங்­களும் இன்று கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளன.  அர­சியல் பழி­வாங்கல், இரா­ணு­வத்­தினர் பழி­வாங்கல் உள்­ளிட்ட தேவை­யற்ற கார­ணி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­ட­மை­யினால் தேசிய பாது­காப்பு வேண்­டு­மென்றே   பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

பொலிஸ்­த­ரப்­பினர் தொடர்பில் இன்று சமூ­கத்தின் மத்­தியில் பல மாறுப்­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. பொலி­ஸாரின் அடிப்­படை தேவைகள் நிறை­வேற்றிக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த அர­சாங்­கத்தின் முன்­னெ­டுத்த செயற்­திட்­டங்கள் அனைத்தும் அர­சியல் பழி­வாங்­க­ளுக்­காக நிறுத்­தப்­பட்­டது.  எமது ஆட்­சியில் மீண்டும் பொலிஸ் தரப்­பி­ன­ரது அடிப்­படை பிரச்­சினை,  பதவி உயர்வு ஆகி­ய­வற்­றிற்கு முறை­யான தீர்வு  பெற்றுக் கொடுக்­கப்­படும்.

பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்க் கொண்ட நிலை­யி­லேயே  யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரும் நோக்கில் 3 இலட்சம் இரா­ணுவ வீரர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டனர். இதன் கார­ண­மா­கவே 30 வருட கால யுத்தம் குறு­கிய காலத்­திற்குள்  முடி­விற்கு கொண்டு வரப்­பட்­டது.

தேசிய பரீட்­சை­களில் வெற்றிக் கொண்டால் மாத்­திரம் எதிர்­காலம் என்­பது கிடை­யாது. பரீட்­சையில் தோல்­வி­ய­டைந்த மாண­வர்­களின் வாழ்க்­கை­யினை முன்­னேற்றும் திட்­டங்கள் ஆட்­சிக்கு வந்து முதல் காலாண்­டுக்குள்   செயற்­ப­டுத்­தப்­படும்.  உயர்­கல்­வி­யினை பெற்றுக் கொண்டால் மாத்­தி­ரமே சர்­வ­தே­சத்தை வெற்றிக் கொள்ள முடியும். இதற்­கான செயற்­திட்­டங்­க­ளையும் எவ்­வித வேறுப்­பா­டு­களும் இன்றி பெற்றுக் கொடுக்­கப்­படும்.

சிவில் யுத்­தத்தின் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தில் முன்­னேற்­ற­ம­டைய முடி­யாமல் போனது. யுத்­தத்தை வெற்றிக் கொண்டு குறு­கிய காலத்­திற்குள் அபி­வி­ருத்­தி­களை செய்தோம். எவரும் எதிர்­பா­ராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.  நல்­லாட்சி அர­சாங்கம் எவ்­வித கொள்­கை­க­ளையும், முறை­யான திட்­டங்­களும் இன்றி ஆட்­சிக்கு வந்­த­மை­யி­னாலே பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்ற முடி­ய­வில்லை.

பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­று­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் கவனம் செலுத்­த­வில்லை. அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து எதிர் தரப்­பி­னரை பழிவாங்கியதால் தேசிய பொருளாதாரம் உட்பட தேசிய  பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக ரீதியில் போட்டியிட முடியாதவர்கள். இன்று பல சூழ்ச்சிகளை பிரயோகித்து  நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். தோன்றியுள்ள அனைத்து  சவால்களையும் எதிர்க் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவேன்.என்றார்.

பகிரவும்...