Main Menu

அங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகும்- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றியினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது வெற்றி சிறந்த வரலாற்று வெற்றியாகுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் கைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்.மாவட்ட மக்கள் மிகச் சிறந்த வரலாற்று வெற்றியினைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த வெற்றியினைப் பெற்றுக் கொடுத்த யாழ்.மாவட்ட மக்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினது சார்பில் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...