ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம்
சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஐக்கிய நாடுகளின் நிபுணரால், இந்த தீர்ப்;பு கண்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் மூன்று பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நடந்த இந்த கொலைக்கு தண்டனை பெற்ற 8பேர் அடையாளம் காணப்படவில்லை. பிரதிவாதிகள் யாரும் பெயரிடப்படவில்லை.
59 வயதான வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரான கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கொல்லப்பட்டார். அவர் தனது திருமண ஆவணங்களைப் பெறுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்திருந்தபோதே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதனிடையே மார்ச் மாதத்தில், கஷோகி கொலை தொடர்பாக துருக்கி வழக்குரைஞர்கள், சவுதி மகுடத்திற்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், ராஜ்யத்தின் உண்மையான ஆட்சியாளரான இரண்டு முன்னாள் மூத்த உதவியாளர்கள் உட்பட 20 சவுதி நாட்டினரை குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டின் படி, சவூதி அரேபியாவின் முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அகமது அல்-அஸ்ரி ஒரு குழுவை நிறுவி, சவுதி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளரின் கொலைக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அரச நீதிமன்றமும் ஊடக ஆலோசகருமான சவுத் அல்-கஹ்தானி, இந்த குழுவுக்கு உத்தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தூண்டி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மற்ற சந்தேக நபர்கள் முக்கியமாக சவுதி அதிகாரிகள் இந்த படுகொலை நடவடிக்கையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. துருக்கிய வழக்குரைஞர்கள் ஏற்கனவே சந்தேக நபர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பகிரவும்...