Main Menu

சிறுமியைக் கொன்ற சிங்கம்

கென்யாவின் தலைநகர் நைரோபியின் புறநகர் பகுதியில் 14 வயது சிறுமியை சிங்கம் ஒன்று தாக்கி கொன்றுள்ளதாக அந்நாட்டு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நைரோபி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் சிறுமி ஒருவர் காணமால் போனதாக வனவிலங்கு திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு திணைக்களத்தினர் தடயங்களை பின்தொடர்ந்து Mbagathi ஆற்றுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை கண்டறிந்தனர்.

சிறுமியை கொன்ற சிங்கம் இதுவரை பிடிப்படவில்லை. சிங்கத்தைப் பிடிக்க ஆங்காங்கே பொறி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க மேலதிகமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவிலேயே நைரோபி தேசிய பூங்கா அமைந்துள்ளது. அது சிங்கங்கள், எருமைகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற விலங்குகளின் தாயகமாகும்.

விலங்குகள் நகரத்திற்குள் வருவதைத் தடுக்க அங்கு மூன்று பக்கங்களிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் விலங்குகள் அந்தப் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர அனுமதிக்க தென் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நைரோபி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்த நாயை சிங்கம் ஒன்று இழுத்து செல்வது அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி இருந்தது,

அதேவேளை, கடந்த சனிக்கிழமையன்று 54 வயதுடைய நபரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். நைரோபியிலிருந்து வடக்கே சுமார் 130 கிமீ (80 மைல்) தொலைவில் உள்ள மத்திய நியேரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பகிரவும்...
0Shares