Main Menu

இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் அரசி­யல் ­வா­திகள் ; தாய்நாட்­டுக்­கான தேசிய வீரர்கள் அமைப்பு

தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் பிளவை ஏற்­ப­டுத்தி அர­சியல் இலாபம் அடை­வ­தற்­காக இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்தை தூண்டும் வகையில் அர­சியல்வாதிகள் செயற்­ப­டு­கின்­றனர். ஆகையால் இனங்­க ­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான  பய­ணத்தில் தம்­முடன் ஒன்­றி­ணை­யு­மாறு முன்னாள் மேஜரும் தாய்நாட்­டுக்­கான  தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன  அழைப்பு விடுத்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

முப்­பது வருட யுத்­தத்தின் பின்னர் அனைத்து இன மக்­களும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், நாட்டு மக்கள் மத்­தியில் குரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் தமிழ்,- சிங்­கள அர­சியல்வாதிகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. யுத்த களத்தில் நேர­டி­யாக தொடர்புபட்­டி­ருந்த இரா­ணுவ வீரர் என்ற வகையில் யுத்­த­ததின் வலியை நன்­றாக உணர்ந்து கொண்­டுள்ளேன்.  அந்த வகையில்  துன்பம் என்­பது அனைத்து  தரப்­பி­ன­ருக்கும்  பொது­வான  விடயமாகும்.

தமிழர், சிங்­க­ளவர் என வேறு­ப­டுத்தி நோக்­கு­வ­தற்­கான தேவை­யெ­துவும் இல்லை.  ஆயினும் சிங்­கள,- தமிழ் மக்­க ளின் ஒற்­று­மையை சீர்­கு­லைக்கும் சக்­தி­க­ளாக அர­சியல்  வாதிகள் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களே இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். மாறாக மக்கள் மத்­தியில் எத்­த­கைய குரோத உணர்வும்  இல்லை.

இன­வாத போக்­கா­னது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு பாத­க­மான விளைவை ஏற்­ப­டுத்­தும். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் மற்­றைய சமூ­கத்­தி­னது கலா­சாரம் மற்றும் பண்­புகள் தொடர்பில் தெரிந்துகொள்­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு  ஒவ்­வொரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான  சமூக நல்­லு­றவு தொடர்பில் அறிந்து கொள்ளும் பட்­சத்தில் குரோ­தங்­களை தவிர்த்­துக்­கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்கும். மக்கள் மத்­தியில் நிலவும் இன­வாத சிந்­த­னை­களை முற்­றாக இல்­லா­தொ­ழித்து அதன் ஊடாக அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப  முடியும்  எனவும் தெரி­வித்­துள்ளார்.

இறுதி யுத்­தத்தின் போது இரு சாரா­ருக்கும் பாரிய இழப்பு ஏற்­பட்­டது. ஏரா­ள­மான  இரா­ணு­வத்­தி­னரும் யுத்­தத்தில் உயி­ரி­ழந்­தனர். பலர் அங்­க­வீ­ன­ம­டைந்­தார்கள். அதன் கார­ண­மாக ஏரா­ள­மான குடும்­பங்கள் பாரிய அளவில் இழப்பை சந்­தித்­தனர். அந்த இழப்­பா­னது வெறு­மனே ஒரு சாரா­ருக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல. மாறாக விடு­தலைப்  புலி­களின் பக்­கத்­திலும் ஏரா­ள­மானோர் கொல்­லப்­பட்­டனர். இதன் ஊடாக அவர்­க­ளு­டைய குடும்­பங்­களும் இழப்பை சந்­திக்க நேரிட்­டது.

இதன்­கா­ர­ண­மாக பல குழந்­தைகள் அநா­தை­க­ளா­கப்­பட்­டுள்­ளனர். பெற்றோர் பிள்­ளை­களை இழந்­துள்­ளனர். இந்­நி­லையில், இழப்பு என்­பது அனை­வ­ருக்கும் பொது­வான விட­ய­மாகும். ஆகவே, இன­மத பேதங்­களை களைந்து இறுதி யுத்­தத்தின் போது கைதுசெய்­யப்­பட்டு சிறை­வாசம் அனு­ப­வித்து வரும் அனை­வரும் விடு­விக்­கப்­ப­ட ­வேண்டும்.    

சிறை­வாசம் அனு­ப­வித்து வரு­ப­வர்­களின் மீது வழக்­குகள் தொட­ரப்­பட்டு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருப்­பினும். அவ ர்கள் அனை­வ­ரையும், அந்த வழக்­குக­ளி­லி­ருந்து நிபந்­த­னை­யின்றி விடு­விக்க வேண் டும். ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜபக் ஷ சிறையில் உள்ள  அனைத்து இராணு­வத்­ தி­ன­ரையும் விடு­விப்­ப­தாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர்களை மாத்திரமல்லாது தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள் பலர்  விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவர் களுக்கு கீழ் பணியாற்றியவர்கள் சிறைக ளில்  உள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களும் விடுவிக்கப்பட வேண்டியது  அவசியமானதாகும்.  

பகிரவும்...