Main Menu

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

அமெரிக்கா – கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில் பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக லூயிஸ்வில்லி பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் லூயிஸ்வில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

பகிரவும்...
0Shares