Main Menu

Porte d’Aubervilliers : 500 அகதிகள் வெளியேற்றம்

இன்று வியாழக்கிழமை காலை Porte d’Aubervilliers பகுதியில் வசித்த 500 அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.  மிக ஆபத்தான முறையில் வசிப்பதாக  தெரிவிக்கபப்ட்டு அகதிகளை வெளியேற்றியுள்ளனர். Porte d’Aubervilliers பகுதியில் கூடாரங்கள் அமைத்து மிக ஆபத்தான அதேவேளை சுகாதாரமற்ற முறையில் குறித்த அகதிகள் வசித்து வந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை காவல்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளும் இணைந்து இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர்.   வெளியேற்றப்பட்ட 500 பேர்களில் 216 பேர் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவும் இவ்வேளையில் கூடாரங்களுக்குள் தங்குவது மிகுந்த ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...