Main Menu

Covid-19 – Créteil வெளிநோயாளர் பரிசோதனை மையம் திறப்பு

Créteil ல் உள்ள ஹென்றி-மோண்டோர் ஏபி-ஹெச்பி (
L’hôpital Henri-Mondor AP-HP ) மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான வெளிநோயாளர் பரிசோதனை மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது . இங்கே மருத்துவமனையின் அவசர சேவைகளுக்கு செல்லாமல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பிரான்சின் அவசர நோயாளர் சேவையான SAMU (15) ஆல் அனுப்பப்பட்ட இவர்கள் அவசர சிகிச்சை பிரிவு வழியாக உள்வாங்கப்படாமல் நேரடியாக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக, இங்கு வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்கள், கொரோனா வைரஸால் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் உடையவர்கள், மருத்துவரால் பரிசோதனைக்குட்படுத்த படுகிறார்கள். மற்றும் வைரஸ் தொற்றுக்கான மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். பின் அவை Covid -19 வைரஸ் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி மேலதிக பரிசோதனைக்குட்படுத்தி நோய்த்தாக்கம் உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு மேலும் சில covid 19 வைரஸ் பரிசோதனைக்கான மையங்கள் ஏனைய பல மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

பகிரவும்...