இலங்கை
வரலாற்றை முறியடித்து புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (10) அதன் அதிகபட்ச சாதனையைப் புதுப்பித்தது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,318.72 யூனிட்டுகளாக உயர்ந்தது. அனைத்து பங்கு விலைக் குறியீடும் பகலில் 143.98 யூனிட்கள் அதிகரிப்பை அடைய முடிந்தது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 0.65%மேலும் படிக்க...
தமிழ் அரசுக் கட்சி பலமாக தொடர்ந்து தமிழ் மக்கள் நலனுக்கு குந்தகமிழைக்காத வகையில் செயற்படும் – சி.வீ.கே

எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றுமேலும் படிக்க...
கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 1.49 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் நேற்று (9) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் பணியகத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் சிங்ஹாரகே ஜனக சில்வா என்ற நபர்மேலும் படிக்க...
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு – பிமல் ரத்நாயக்க

வடக்கில் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்கத்தினால் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டால் மதமேலும் படிக்க...
சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போதுமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று(10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யோம்

ஜெனிவா விவகாரத்தை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும் அரசியல் இருப்புக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறான செயற்பாடுகளில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை.மேலும் படிக்க...
யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மக்களின் நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் – இராமலிங்கம் சந்திரசேகர்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் நிச்சயம் மாற்றம் வருமென தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்றமேலும் படிக்க...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விரைவில் ஸ்தாபிப்பு

” உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். குறித்த ஆணைக்குழுவின் பணியும் விரைவில் ஆரம்பமாகும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவைமேலும் படிக்க...
இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது. இந்தத் தகவலைமேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்மேலும் படிக்க...
உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் இன்று (09) காலைமேலும் படிக்க...
அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள்மேலும் படிக்க...
இராமர் பாலத்தை பார்வையிட படகுச் சேவை

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடற்கரை பூங்காவானது மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு குறித்தமேலும் படிக்க...
ஊழல், மோசடி விசாரணைகளை குழப்புவதே எதிரணியின் நோக்கம்

“இலங்கையில் ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராகக் கைது செய்யப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைக் குழப்புவதே அவர்களின் நோக்கமாகும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸமேலும் படிக்க...
யாழில் அணையா விளக்கு தூபி உடைப்பு

யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. போராட்டத்தின்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியின் உளங்குளம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மரதன்கடவல பொலிஸ் நிலையமேலும் படிக்க...
இலங்கை நாடாளு மன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?

நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார். “நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 386
- மேலும் படிக்க