இலங்கை
மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது திருமண மண்டபங்களில் மறு அறிவித்தல் வரை திருமணத்தை நடத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வாமேலும் படிக்க...
இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன்
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்மேலும் படிக்க...
ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப் பட்டது
அண்மையில் 2ஆவது மரண பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், அவரது பெற்றோரிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறுமி ஹிஷாலியினின்மேலும் படிக்க...
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து, இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர், தடுப்பூசி அட்டையின்றி பொதுமேலும் படிக்க...
நல்லூர் ஆலயத்திற்குள் வருவதை தவிருங்கள்- லலித் லியனகே
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் ஆலயத்திற்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதா கிருஸ்ணன்
எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும் என்றும் இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துமேலும் படிக்க...
வவுனியாவில் 19 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுப்பு!
வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இதன்போது அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் பங்கேற்பதற்கான பயணங்களை நிறுத்துமாறு கோரிக்கை
மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்துகொள்ள நீண்ட பயணங்களை மேற்கொண்டு வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்துமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடுமேலும் படிக்க...
அசாத் சாலி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் இருந்து நீதியரசர் விலகல் !
அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார். தன்னை சி.ஐ.டி.காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடக் கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்மேலும் படிக்க...
இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்
நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். முழுமையாக ஊரடங்கை பிறப்பிக்க அரசாங்கத்திடம் எவ்வித எதிர்பார்ப்பும்மேலும் படிக்க...
திருமண வைபவங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் – இராணுவ தளபதி
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அத்தியாவசியமேலும் படிக்க...
அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனது மகனுக்கு இல்லை – முன்னாள் ஜனாதிபதி
தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான தவறான செய்திகள் மூலம்மேலும் படிக்க...
வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு- வவுனியாவில் சம்பவம்
வவுனியா- தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல்வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணையைமேலும் படிக்க...
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார். அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் பெண்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
உயர் கல்வியினை இராணுவமயம் ஆக்குவதனை கடுமையாக எதிர்க்கிறோம் – யாழ். பல்கலைக் கழகம்
உயர்கல்வியினை இராணுவமயமாக்குவதனை கடுமையாக எதிர்ப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார். இன்று மு.ப. 11.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதியை, சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகரமேலும் படிக்க...
வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையானமேலும் படிக்க...
சிறுவர்களை வீட்டில் பணிக்கு அமர்த்தி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!
வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வகையில் இவர்களை மீள அனுப்பாதவர்கள் மீதுமேலும் படிக்க...
விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் – ஜி.எல். பீரிஸ்
முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார்.மேலும் படிக்க...
இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள்
இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கமைய இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சுமார் 75 வீதமானவை செயற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- …
- 256
- மேலும் படிக்க