இலங்கை
நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல் – இஸ்லாமிய அமைப்புக்கள் அறிக்கை!
இலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ளமேலும் படிக்க...
யாழில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவைச் சேர்ந்தமேலும் படிக்க...
சுயாதீன ஊடகவியலாளரான பிரகாஸ் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !
கொரோனோ தொற்று உறுதியாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் நேற்று உயிரிழந்துள்ளார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ், சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார். அதேவேளைமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மாம்பழ திருவிழா
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் உள்வீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழாமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம், ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தது. அதனையடுத்து, கொரோனா அச்சம் காரணமாக, செப்டெம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் நாட்டில்மேலும் படிக்க...
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் – அமைச்சர் பசில்
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது. அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார். சீன சபாநாயகர்மேலும் படிக்க...
இலங்கையில் தனிமைப் படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தமேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் நீலிகா மளவிகே
பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் படிக்க...
இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், “சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட்மேலும் படிக்க...
வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 3 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா: 50 பேர் மரணம்
வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. இந்த நிலையில் சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோமேலும் படிக்க...
வைகோவுடன் சந்திப்பு; ஈழத்தமிழர் பிரச்னைகளை பரிமாறிக் கொண்டோம் – ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர், இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், நேற்று (30.08.2021), சென்னை அண்ணா நகரில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தார். தனது தந்தையார் ஆறுமுகம் தொண்டைமான்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் பல சவால்களைமேலும் படிக்க...
அரசாங்கம் புலம்பெயர்ந்த மக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்- துரைரெட்ணம்
யுத்தக்காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர் – ஐ.நா.
வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின் வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ்-மேலும் படிக்க...
தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி
திருக்கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் முத்துக்குமார சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்காட்சியளித்தார். நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் 17ஆம் திருவிழாவான நேற்றைய தினம் திருக்கார்த்திகை திருவிழாவாகும்.மேலும் படிக்க...
தியாகங்களை செய்ய வேண்டும் என கோருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை – ரணில்
தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்குமேலும் படிக்க...
இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் செல்வம்
இலங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவருக்குமேலும் படிக்க...
அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- …
- 256
- மேலும் படிக்க