இலங்கை
இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்-களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கை சுங்க வருமானம் 2 டிரில்லியனைத் தாண்டியது

இலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் நேற்றைய (30) நிலவரப்படி 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை இலங்கை சுங்கம் வெற்றிகரமாக நெருங்கி வருகிறது. வரலாற்றில் அரசாங்க வரிமேலும் படிக்க...
மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான்மேலும் படிக்க...
ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கோம் – சி.வி.கே.சிவஞானம்

“இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது. ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம்மேலும் படிக்க...
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899மேலும் படிக்க...
இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15மேலும் படிக்க...
இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தின் திறப்பு விழா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில் உள்ள மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு திறந்து வைத்துமேலும் படிக்க...
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும்,மேலும் படிக்க...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர்மேலும் படிக்க...
யுவான் நாணயத்தைப் பயன்படுத்தி இலங்கை-சீனாவுக்கு இடையே வர்த்தகம்?

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தகத்தை சீன யுவான் நாணய அலகைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில், RMB வசதியைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. சீனத் தூதுவர் ஷி ஷெங் ஹொங், மத்திய வங்கி ஆளுநர்மேலும் படிக்க...
மலையக தமிழர்களின் சனத்தொகையில் வீழ்ச்சி

நாட்டில் பெருந்தோட்ட பிரிவுகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30.10.2025) வெளியிட்டது. குறித்த அறிக்கையில் பல்வேறுமேலும் படிக்க...
நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்களுடன் 100,000 பேர் நாட்டில்

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் தொடர்பான விசேட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரெஸ்னி காசிம் நேற்று நடைபெற்றமேலும் படிக்க...
சமூக ஸ்திரத் தன்மைக்கு போதைப் பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’மேலும் படிக்க...
வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்மேலும் படிக்க...
நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கு முன்னாள் ஜனாதிபதி, அரச தலைவராகப் பணியாற்றியபோது, பிரித்தானியமேலும் படிக்க...
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்ளின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார். இது குறித்துமேலும் படிக்க...
ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத்மேலும் படிக்க...
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்திய சாலையில்

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று, பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர்மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில், காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- …
- 438
- மேலும் படிக்க

