Main Menu

இது சொல்லாட்சி அல்ல செயலாட்சி!: முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எனது அரசு அல்ல, நமது அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 3 ஆண்டுகள் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி. 

திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு. இது சொல்லாட்சி அல்ல. செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது.
நம்பிக்கையோடு முன்செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். மூன்றாண்டு தலைசிறந்தது. தமிழகம் தலைநிமிர்ந்தது. நாடும் மாநிலமும் பயனுற எந்தாளும் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை தொடர்வேன். 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். 

பகிரவும்...