Main Menu

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி நேற்று (26) காலை நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்திற்குப் பின்னர் , நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.