Main Menu

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறுகல்நிலையைத் தொடர்ந்து, பலதரப்பட்ட கனேடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வர்த்தக பேச்சுவார்த்தை முறவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது ” பரஸ்பர வரி விதித்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது

ஓகஸ்ட் 19-ஆம் திகதிக்குள் சுமார் 20 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கனேடிய இறக்குமதிகள் மீது 50சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஜூலை மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எனினும் இரு நாடுகளுக்கும் “மிகவும் நன்மை பயக்கும்” ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இரு தரப்பினரும் அண்மித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வரிவிதிப்பினை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

எனினும் ஒப்பந்தத்திற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைகளில் “முக்கியமான முன்னேற்றம்” ஏற்பட்டிருந்தாலும், “கனேடியர்களுக்கான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தம் போதுமானதாக இல்லை” எஅந்த நாட்டு பிரதமர் மார்க்கார்னி தெரிவித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“இதன் விளைவாக, இன்று பிற்பகல் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளதுடன் , அடுத்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதாக கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, அறிவித்துள்ளதுடன் அமெரிக்கப் பொருட்கள் மீது ” பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகள் நியாயமற்றது எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டியுள்ளார்