ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் இன்று (1) ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
