Main Menu

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

தொடர்ந்து பெய்து வரும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கண்ணங்கரா, இன்று நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 என்று தெரிவித்துள்ளார்.

தினமும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 950 முதல் 1,000 வரை உள்ளது என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.