Main Menu

PSG மீண்டும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது

Paris Saint-Germain (PSG) அணி, புடாபெஸ்டில் (Budapest-Hongrie) நடைபெற்ற UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் Arsenalஐ பெனால்டி கிக்ஸ் மூலம் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரமும் கூடுதல் நேரமும் 1-1 என்ற சமநிலையில் முடிந்தன.

Arsenal போட்டியின் தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால் PSG வீரர்கள் தொடர்ந்து போராடி, 65-வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே (Ousmane Dembélé) அடித்த பெனால்டி கோலின் மூலம் சமநிலையை எட்டினர். அதன் பிறகு இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க முடியவில்லை.

பெனால்டி கிக்ஸ் மூலம் PSG அதிக துல்லியத்துடன் விளையாடியது. Arsenal வீரர்களான எபெரெச்சி எசே (Eberechi Eze) மற்றும் கப்ரியல் (Gabriel) தங்களது முயற்சிகளை தவறவிட்டதால், PSG வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் பரிஸ் அணி தனது தொடர்ச்சியான ஆறாவது பெனால்டி வெற்றியையும் பதிவு செய்தது.

கடந்த ஆண்டு இன்டர் மிலானை (l’Inter Milan) வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற PSG, இப்போது தனது பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம், ஆர்சனல் தனது முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கனவை இன்னும் நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.