Main Menu

விமல் வீரவங்சவுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்குக் கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று (25) பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் தலங்கம காவல் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையிலே அவர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.