Main Menu

மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை

ஈரானில் நடக்கும் போர் எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் நீரிணை முற்றாக திறக்கப்பட்டாலும் கூட 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின் உணவுப் பணவீக்கம் 9 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று ஒரு வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.

அதன்படி, 12,000 உணவு மற்றும் பான உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உணவு மற்றும் பான கூட்டமைப்பு 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விலைகள் குறைந்தது 9% உயரும் என்று கணித்துள்ளது.

இது மத்திய கிழக்கு மோதலுக்கு முன்பு வர்த்தக அமைப்பின் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த 3.2 சதவீதம் என்ற கணிப்பை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

ஹார்முஸ் நீரிணை திறம்பட மூடப்பட்டுள்ளதாலும், மத்திய கிழக்கில் எரிசக்தி உள்கட்டமைப்பில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சேதங்களாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பிரென்ட் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.