Main Menu

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர் காயம் ; சாரதி கைது

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது, பஸ்ஸில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...