டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள இந்தியப் பிரதமர்

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, எலிசி அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கிய வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.
இதில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) பாரிஸிற்கு பயணமானார்.
அத்துடன் பிரான்ஸ் ஜனாதிபதி ம்மானுவேல் மக்ரோனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதனையடுத்து பாரிஸில் இருந்து இந்தியப் பிரதமர் நாளை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிற்கு பயணமாகவுள்ளார்.
இந்தநிலையில் இந்தியப் பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நாளை மறுதினம் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.