மெகா சீரியல்களுக்கு தடை விதிக்க கேரள மகளிர் ஆணையம் பரிந்துரை

கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.
மேலும் 57 சதவீதத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கக் கேடான அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் வருமாறு:-
தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா சீரியல்களை நிறுத்த வேண்டும். ஒரு தொடரின் எபிசோட்களின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும்.
ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றை முறையான தணிக்கை செய்யப்பட வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தற்போதுள்ள திரைப்பட தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப் பேற்க வேண்டும்.
இளைய பார்வை யாளர்கள் பார்க்க பொருத்த மானதாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பங்கள் மற்றம் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும்.
கருப்பொருள் பெரும்பாலும் உண்மைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. இது இளம் பார்வையாளர்களிடையே தீங்கு விளைவிக்கும் சாயல்களுக்கு வழி வகுக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும். பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பகிரவும்...