Main Menu

பாராளுமன்றின் பெரும்பான்மையை கைப்பற்றியது NPP

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளது.

இதுவரை தேசிய மக்கள் சக்தி  6,842,223 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61.73% ஆகும்.