Main Menu

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாகப் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன.
வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுவது அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது.
அரபிக் கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிப்பொழிவிற்குக் காரணம் என சவுதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.