மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் 56 இலங்கையர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மியன்மார் அரசாங்கம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இது தொடர்பான ஒத்துழபை்புகளைக் வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.