Main Menu

கத்திக் குத்துக்கு இலக்காகி பெண் படுகொலை

Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்குள்ள வீடொன்றில் 43 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது 14 வயதுடைய மகள் ஒருவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் பல தடவைகள் கத்தியினால் குத்தப்பட்டுள்ளார் எனவும், தாக்குதல் நடத்தியது அப்பெண்ணின் கணவர் எனவும், அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த கணவர் இன்று புதன்கிழமை காலை Viry-Chatillon நகரில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் Essonne மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...