2ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)
தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை இன்று நினைவு கூரப்படுகின்றது.
இன்று 2ம் ஆண்டில் நினைவு கூரப்படும்அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அவர்களை அன்பு கணவர் இரட்ணசிங்கம் ( ஓய்வுபெற்ற அதிபர் ) ஜேர்மனி, அன்பு பிள்ளைகள் ஸ்ரீரங்கன் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர் பிரான்ஸ், ஸ்ரீரமணன் பிரான்ஸ் , தாரணி ஜேர்மனி, அன்பு மருமக்கள் சாந்தினி பிரான்ஸ் , தீபா பிரான்ஸ், மத்தியாஸ் ஜேர்மனி பாசமிகு பேரப் பிள்ளைகள் தர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், யதுர்சிகா, ஆதவன், அபிஷேக், லக்சிகா மற்றும் உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் அமரர் புவனேஸ்வரி இரட்ணசிங்கம் அம்மாவை நினைவு கூருகின்றார்கள்.
அமரர் புவனேஸ்வரி இரட்ணசிங்கம் ( நீலா ரீச்சர் ) அவர்களை ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் இரண்டாவது ஆண்டில் நினைவு
கூருகின்றார்கள்.
இன்றைய ரி ஆர் ரி தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் எமது அன்பு உறவுகள். திரு திருமதி சத்தியநாதன் குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எங்கள் இதய பூர்வமான நன்றிகள்.